Thursday, 2 October 2025

மகாத்மாக்கள் மரிப்பாறில்லை

மகாத்மாக்கள் மரிப்பதில்லை.

தந்தை இழந்தோமென
தவிக்கும் மானுடமே!
உந்தை அமைதியில்--என்றும்
உன்னிலே வாழ்கிறார்.

புனிதன் ஏசு போன் றோரும்,
புத்தன் தோன்றலின் பின்னவரும்,
மனிதம் துலங்க வந்த மகான்கள்--பிறவி 
மாறி மாறி அவதரித்து ஊறினர் .

காந்தி மார்டின் மண்டேலாவும்
ஏந்தி வந்த அவதாரங்களாவர்.
அவரவர் வேலை அவரவர் முடித்தும்--ஓய்வாய்
அமரம் ஆனோர் மீண்டும் வருவர் அவசியத்தில்.

மகாத்மாக்கள் மரிப்பாரில்லை
மனிதம் மரிக்கப் பொறுப்பார் இல்லை.
எங்கோ என்றோ தோன்றாமல் இல்லை--வரவு .
என்றோ எப்போ அறிவார் இல்லை.

அக்கிரமங் கூடி அத்து மீறுது.
உக்கிரம் ஏறி பரமனைத் தூண்டுது.
இயற்கை சீறி எச்சரிக்கை கூறுது.
எதையும் மீறினால் இறைவனே இறங்குவார்.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment