Saturday, 4 October 2025

இறைவன் ஒருவனே முதலாளி.



வாழ்கத் தொழிலாளர்.

வாழ்க்கை என்பது போராட்டம்.
வாழ்ந்திடும் நாளே களமாகும்!
வாழ நினைத்துப் போராடு.
வாழ்ந்திட நித்தம் களமாடு.

வயிற்றின் அளவோ ஒருச்சாணே!
உயிரின் உழைப்பே அதுதானே.
உழைக்கும் காலம் நீரோட்டம்.
பிழைப்பே உயிரின் ஏரோட்டம்.

தொழிலைத் தொழுதால்
அருள் செய்யும்,
தொழில் செய்தாலே 
பொருள்செய்யும்.
தொழில் அறிந்தோரே 
தொழில் முனைவார்.
தொழில் ஆள்வோரே
தொழிலாளர்.

ஆண்டவன் ஒருவன் முதலாளி
அனைவரும் இங்கே தொழிலாளி. 
ஆலங்குடியார் பாடி வைத்தார்.
வாழும் வழிமுறை கூறி வைத்தார்.

கொ.பெ.பி.அய்யா







No comments:

Post a Comment