கோடை வந்தது
கோடைக் காலம் வந்தது.
வாடைக் காற்றும் ஓய்ந்தது,
குளிர் மறைந்து வெந்தது,
குளம் வற்றிக் காய்ந்தது.
நெருங்கி வரும் சூரியன்,
நெருப்பை வீசிக் கொட்டுது,
உருகிக் கரையும் பனிமலை
உலகைப் பயங் காட்டுது.
மரங்கள் இலை நீக்குது,
மண்ணின் ஈரம் காக்குது
மாசடைந்த வானமோ-
மோச மாகிக் கிழியுது,
பருவ நிலை தப்புது,
பாச னங்கள் குறையுது,
பெய்யாமல் பொய்க்குது,
பெய்தும் வெள்ளம்
அழிக்குது
பறவை யெல்லாம் பறக்குது,
பசுமை தேடி அலையுது,
வறுமைப் பட்ட பூமியோ--
வறண்டு சுருண்டு வாடுது..
மனிதரே உணருங்கள்,
மாசு போக்க உதவுங்கள்,
வெப்பந் தாங்க முடியல,
வேகுதிந்த உலகமே!
வாகனங்கள் புகையுது.
வானம் மாசு நிறையுது.
ஆகாயம் சூடேறி
அண்டம் சூழல் மாறுது.
மெஞ்ஞானம் எச்சரிக்கை
விஞ்ஞானம் உச்சறிக்கை.
எஞ்ஞானம் ஏது செய்யும்?
அஞ்ஞானம் அய்யோ பாவம்!
வீட்டுக் கொரு மரம் வளர்ப்போம்--அது
நாட்டுக்கும் உலகுக்கும் குளுகுளுப்பு.
காடுகளுக்குள் வீடுகள் அமைப்போம்.
குளிர் சாதனங்களை ஒழிப்போம்.
ஓசோனைக் காத்து உயிர்களை வாழவைப்போம்.
கவிஞர்.கொ.பெ.பிச்சையா.
No comments:
Post a Comment