Wednesday, 15 October 2025

கண்ணும் கண்ணும்

கண்ணும் கண்ணும்

கண்ணும் கண்ணும் கண்டும் பேசும்
கண்டவர் காண கண்களும் கூசும்.
இதயம் பேசும் இரகசிய மொழிகள்
உதயமாகும் விழிகளின் வழிகள்.

அக்கம் பக்கம் ஆரிருந் தாலும்
தர்க்கம் செய்யும் தாமிரு காதலும்.
குறிப்பால் அறியும் குறிப்புணர் பயிற்சி 
இறைவனுங் கூட இயற்றிடா முயற்சி..

உண்ணும் விழிகள் உணரும் மொழிகள்
கண்ணும் கண்ணும் கலந்திடும் வழிகள்
ஓசை  அறியா உணர்வின் குறிகள்.
ஆசை அறிந்த கனவின் .வரிகள்.

நேருக்கு நேரே சந்திக்கும் ஏக்கம்
நேருந் தருணம் கலந்திடக் கூச்சம்.
நோக்க நோக்கிக் கவிழ்ந்து திகைக்கும்
ஆக்கும் மொழிகள் மறந்தும் நகைக்கும்.

ஆசைகள் தூண்டி அளாவத் துடிக்கும்
பாசைகள் வேண்டிப் பழகிட நடிக்கும்.
ஓசைகள் தாண்டி ஒளிந்திட முடிக்கும்.
மசியச் சுணங்கி ஒருகண் படிக்கும்.

மௌனம் பேசி சகுனம் கூறும்
கவனம் கூறி கணணில் தேறும்.
கண்கள் கசிந்து தன்னிலை ஆறும்.
எண்ணம் மசிய ஏது ஊறும்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

மெட்டு:பாலும் பழமும் 

இளைஞனே விழித்தெழு"!!

இளைஞனே நீ விழித்தெழு!!

இளைஞனே நீ விழித்தெழு.
எதிர் காலந்தான் அழைக்கிறது.
நாளைய சமூகம் நீயானது.
வேளை இதுதான் உணர்வானது.

எதிரே பார்  தெரிகிறதா.?
புதிராய் விடுகதை புரிகிறதா?
உன்ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃனைச் சுற்றி சதிவலைகள்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ மறைத்து விரிகிறதா?

உல்லாசம் சல்லாபம் எதற்காக?
ஃ கெடுவினை அதற்காக.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ நூறாக்கும் சூழ்ச்சிவலை.
ஃஃஃஃஃஅடிமைப் பழக்கம் அபாயம்
குடிமது போதை அழிமோகம்.
மயக்கிக் கொல்லும் சிற்றின்பம்
மயங்குதல் பாதகச் செயலாகும்.

உடம்பை இரும்பாய் கட்டிடனும்
நரம்பை வலிமைப் படுத்திடனும்.
சுவரில்லாத சித்திரமா!
தவறில்லாத செயல்த் திறமா!

உடம்பு தானே பிரதானம்
கடமை அதற்குள் சன்னிதானம்.
உடலும் அறிவும் வலுவிருந்தால்.
முடிக்கும் செயலும் தெளிவிருக்கும்.

காலம் வெகுதூரம் எதிரே
காத்துக் கிடக்கிற கனவு.
இலக்கைக் குறிவை,! ஓடு!
அடையும் வரைக்கும் ஓயாதே.

விதைக்கும் காலம் விதையாதது,
விளையும் காலம் விளையாது.
முளைக்கும் காலம் நோய்பட்டால்
வளரும் காலமே முடிந்து விடும்.

படிக்கும் நேரம் படித்திடனும்.
பயனுறும் காலம் கணித்திடனும்.
அறிவை ஏற்றி வளர்ந்திடனும்.
திறமை காட்டி உயர்ந்திடனும்.

தன்னை நம்பி முயன்றிடனும்
தன்னையே நம்பி வென்றிடனும்.
வலிமை தானே நம்பிக்கை
எளிமைத் தயர்வை அகற்றிடனும்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

.


Sunday, 12 October 2025

திவினேஸ்

திவினேஸ்

ஒளி மயமான உன்னெதிர் காலம்
வழி நிசமான சரிகமப பாலம்.
பெயரின் பொருளும் அப்படிக் கூறும்.
முயன்றிட மேலும் உயரம் ஏறும்.

திவினேஸ் என்றால் கதிரொளியாகும்
கவினுன் பாட்டோ வானொலியாகும்.
சூரியன் போலே பிரகாச மாயம்
அரங்கம் ததும்பி அகிலம் பாயும்.

ஜீதமிழ் கண்ட திவினேஸ் நாதம்
ஜேதமிழ் வென்ற அமுத கானம்
அந்த மேடை அரங்கேற்ற மேடை
சொந்த மேடை சுழல்பூமி நாளை.

எத்தனை உயரம்  உயர்வாய் புகழை
அத்தனை கவனம் ஆள்வாய் வாழ்வை.
உலகம் உன்னைச் சுற்றிச் சுழலும்.
உறவும் உன்னைப் பற்றி வளரும்.

இனிப்பும் கசப்பும் கலந்த வாழ்வை
ஏற்றார்ப் போலவே சுவைத்து வாழ்க.
ஏழைக் கிழவனுன் தாதாவை சொல்லி
வாழ்வை உயர்த்து அவர்தோள் எண்ணி.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

பருவத் தூண்டல்

பருவத் தூண்டல்.

பருவ வயது உருகுது மனது
உருவம் விலகுது உள்ளம் பழகுது
அரும்பும் மோகம் தகைமை தவறுது.
விருப்பம் போதும் என்றே தேடுது.

வயது தானது வலிய முந்துது.
அறிவு தானது மெலியப் பிந்துது.
சந்திக்கத் துடிக்கும் பாலுணர் வாவது.
சிந்திக்கப் பக்கம் அறிய மறந்தது.

தன்பா லுணர்வைச் சுவைக்கத் தானது,
மறுபா லுணர்வைத் தூண்டி உசுப்புவது,
பெண்பால் ஆண்பால் அறிய இரசிப்பது,
இருபா லுணர்வை எண்ணி உருசிப்பது.

கன்னி இரசனை காதல் முயல்வது,
பின்னி உறவை ஆவல் உணர்வது.
இயல்பின் மர்மம் தெளிய முனைவது,
அயலுணர் ஆர்வம் விளங்க விழைவது.

பேச்சுக்கு முன்னே மூச்சு முந்துது. 
மூச்சுக்குப் பின்னே  வார்த்தை பிந்துது.
காற்றுத் தானது காதல் பேசுது
கதப்பில் தானோ இருமுகம் கூசுது. 

கவிஞர். கொ. பெ. பிச்சையா.


Sunday, 5 October 2025

அப்பாவைப் போல

சுமைதாங்கி.

அப்பாவைப் போல-- அவர் 
அன்புக்கும் மேல 
யாருனு சொல்ல--உலகில்
அவர் போல் இல்ல.
சுமையென எண்ணா--குடும்பம்
சுமக்கும் அப்பா
சுமைதாங்கி தான்னு--உன்னை
சொன்னால் என்ன தப்பா.

நானும் ஏனோ வீணே வம்பு
சேட்டைச் செய்யும் போதிலே,
வானம் மின்னிஇடியும் இடிக்கும் 
கோவம்‌ போலச்,சும்மா நடிப்பார்.
அடியும் அடிப்பார் அதட்டிப் பிடிப்பார்
கண்டிப்ப தாக என்ன லனுக்காக.
அப்புறம் பெய்யும் பாசமழை போல் அன்பைப் பொழிவார் நிசமென் மேல்.

தட்டில் சோறை தானே பிசைந்து 
தடவிக் கொடுத்து ஊட்டுவார்.
அடித்தக் கையை தானே கடிந்து 
அழுவார் பின்னே வருந்தி நொந்து..
பிள்ளை என்மேல் கொள்ளைப் பாசம்
உள்ளம் கனிந்து செல்லம் பேசுவார்.
மெல்லம் மொழியும் செய்யும் சமரசம்
சொல்லு மென்னகை பெய்யும் கனிரசம்

வேளை தவறி உண்ணாமல் வெளியே திரிந்தால் உதையே ஒளிந்தால் பயமே.
அந்தந்த வேளை அந்தந்தச் செயலை
அமையச் செய்தால் சரிதான் நயமே.
பசிதாங்க மாட்டான் பிள்ளை என்றே
பதறிப் பதறித் தேடுவார் அழைத்து
கூப்பிட என்னைத் தாயிடம் சொல்லி
சாப்பிட வைப்பார் பக்கம் அமர்த்தி.

தோளில் சுமந்து உயர்த்திப் பிடித்து,,
தூரம் பாரென உலகைக் காட்டி
நான்தேடா உலகை நீகாண வேண்டும்
நீகண்ட உலகம் நான்வாழ வேண்டும்.
என்றே என்னைத் தூக்கி  ஏற்றி
தன்னைத் தாழ்த்தி என்னை உயர்த்தி
எண்ணம் வென்று உச்சி முகர்ந்தார்.
பின்னே மெச்சி முன்னே மகிழ்ந்தார்.

இருக்கும் போதவர் இம்சை என்றேன்
இல்லாத போது இழப்பு என்றேன்.
பறந்த பின்னே திருந்தி அழுதேன்
இழந்த பின்னே உணர்ந்து தொழுதேன்.
வெற்றிட அருமை விதியிடம் கேட்டேன்.
முற்றிய ஞானம் முதுமையில் படித்தேன்
நிழலின் அருமை வெயிலில் அறிந்தேன்
பழமைப் பெருமை நிலைமை புரிந்தேன்.

கவிஞர்.கொ.பெ.பிச்சையா.
 










Saturday, 4 October 2025

கலை வாழுந்தமிழகம்

தமிழகம்.

கொடையர் ஆண்ட 
படை நாடு வென்றோம்.
கடைக்கோடி மனிதரும் 
கனம் வாழக் கொண்டோம்.
எல்லோரும் எல்லாம் 
இயன்றோம் செல்வம்.
தமிழர் தனிக்கலை
தரணியில் படைத்தோம்.

வள்ளுவன் மறைமொழி
உள்ளம் நிறைத்தோம்.
நல்லவர் வல்லவர் 
வாழ்வியல் படித்தோம்.
வாழ்ந்தது வாழ்ந்து 
வழிமுறை செய்தோம்.
ஔவை செப்பிய 
செவ்வழி நடந்தோம்.

வியந்திடச் செய்தே 
நயங்கலை உயர்ந்தோம்.
முயன்று இலக்கியம்
முன்னணி சென்றோம்.
கம்பன் இளங்கோ
கவிவளம் கண்டோம்.
வென்றும் நின்றோம்
விந்தியம் கடந்தும்.

சோழர் சேரர்
பாண்டியர் வாழ்வியல்
ஆண்ட அருமை
வாழ்ந்த பெருமை.
இமயம் வென்றும்
இயல்பில் வாழ்ந்தோம்.
சமயம் என்றும்
சமத்துவம் என்றோம்.

செம்மொழி மேன்மை
எம்மொழி ஆண்டோம்.
தமிழால் இனித்தோம்
அமிழ்தம் சுவைத்தோம்.
மொழியின் தொன்மை
அழகிய தன்மை.
உலகின் ஒருமை
விலக்கினோம் சிறுமை.
விளங்கும் அமைதி
விளக்கி வாழ்வோம்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.


கோடைக் காலம் வந்தது.

கோடை வந்தது

கோடைக் காலம் வந்தது.
வாடைக் காற்றும் ஓய்ந்தது,
குளிர் மறைந்து வெந்தது,
குளம் வற்றிக் காய்ந்தது.

நெருங்கி வரும் சூரியன்,
நெருப்பை வீசிக் கொட்டுது,
உருகிக் கரையும் பனிமலை
உலகைப் பயங் காட்டுது.

மரங்கள் இலை நீக்குது,
மண்ணின் ஈரம் காக்குது
மாசடைந்த வானமோ-
மோச மாகிக் கிழியுது,

பருவ நிலை தப்புது,
பாச னங்கள் குறையுது,
பெய்யாமல் பொய்க்குது,
பெய்தும் வெள்ளம் 
அழிக்குது

பறவை யெல்லாம் பறக்குது,
பசுமை தேடி அலையுது,
வறுமைப் பட்ட பூமியோ--
வறண்டு சுருண்டு வாடுது..

மனிதரே உணருங்கள்,
மாசு போக்க உதவுங்கள்,
வெப்பந்  தாங்க முடியல,
வேகுதிந்த உலகமே!

வாகனங்கள் புகையுது.
வானம் மாசு நிறையுது.
ஆகாயம் சூடேறி
அண்டம் சூழல் மாறுது.

மெஞ்ஞானம் எச்சரிக்கை
விஞ்ஞானம் உச்சறிக்கை.
எஞ்ஞானம் ஏது செய்யும்?
அஞ்ஞானம் அய்யோ பாவம்!

வீட்டுக் கொரு மரம் வளர்ப்போம்--அது
நாட்டுக்கும்  உலகுக்கும் குளுகுளுப்பு.
காடுகளுக்குள் வீடுகள் அமைப்போம்.
குளிர் சாதனங்களை ஒழிப்போம்.
ஓசோனைக் காத்து உயிர்களை வாழவைப்போம். 

கவிஞர்.கொ.பெ.பிச்சையா.







இறைவன் ஒருவனே முதலாளி.



வாழ்கத் தொழிலாளர்.

வாழ்க்கை என்பது போராட்டம்.
வாழ்ந்திடும் நாளே களமாகும்!
வாழ நினைத்துப் போராடு.
வாழ்ந்திட நித்தம் களமாடு.

வயிற்றின் அளவோ ஒருச்சாணே!
உயிரின் உழைப்பே அதுதானே.
உழைக்கும் காலம் நீரோட்டம்.
பிழைப்பே உயிரின் ஏரோட்டம்.

தொழிலைத் தொழுதால்
அருள் செய்யும்,
தொழில் செய்தாலே 
பொருள்செய்யும்.
தொழில் அறிந்தோரே 
தொழில் முனைவார்.
தொழில் ஆள்வோரே
தொழிலாளர்.

ஆண்டவன் ஒருவன் முதலாளி
அனைவரும் இங்கே தொழிலாளி. 
ஆலங்குடியார் பாடி வைத்தார்.
வாழும் வழிமுறை கூறி வைத்தார்.

கொ.பெ.பி.அய்யா







Thursday, 2 October 2025

கர்மயோகி காமராசர்.

கடைசிக் கருணை!!

காமராசர் பிறந்தநாள் வாழ்தது
(15/7/1903-----2/10/1975)

கடைசிக் கருணை!!

காமராசர் பிறந்தநாள் வாழ்தது
(15/7/1903-----2/10/1975)

கடைசிக் கருணையாம்
காமராசர் புகழ் வாழ்க!
ஊழலற்ற ஆட்சி தந்த
உத்தமர் புகழ் வாழ்க!

எத்தனை எத்தனை தானங்கள்,
அத்தனை அத்தனை யோகங்கள்,
கண்தானம் மிஞ்சிய தானம் 
கல்வித் தானம்

படிக்காத மேதையவர்
பண்பாளர் புகழ் வாழ்க!
பசிமறந்தப் பாடசாலை
பகலுணவுப் புகழ் வாழ்க!
பசுமைத்தமிழ் நாடுசெய்த
பாரிமகன் புகழ் வாழ்க!

இறுதி வரை வீடில்லாத
ஏழையவர் புகழ் வாழ்க!
அரசியல் துறவியவர்
அறவாழி புகழ் வாழ்க!

தூற்றினோரும் போற்ற வரும்
தூயரவர் புகழ் வாழ்க!
ஏற்பான தொண்டதனின்
இமயமவர் புகழ் வாழ்க!

பிறர் மனம் வருத்தாத
பெருமையவர் புகழ் வாழ்க!
இடித்தோரையும் ஏற்கின்ற
இனியாரவர் புகழ் வாழ்க!

சுயநலம் பேணாதச்
சொக்கதங்கம் புகழ் வாழ்க!
சொந்தமே மக்களென்ற
சொந்தக்காரர் புகழ் வாழ்க!

தொண்டே வாழ்வான
தொண்டரவர் புகழ் வாழ்க!
நாடன்றி வேறொன்றும்
நாடாராம் புகழ் வாழ்க!

நாட்டு வளப் பூகோளம்
நடந்தறிந்த புகழ் வாழ்க!
வீடொன்றும் நாடாராம்
விந்தை நாடார்
 புகழ் வாழ்க!

விருதுபட்டிக் கிராமத்தின்
விருது அவர் புகழ் வாழ்க!
சிவகாமி குமாரசாமி
கர்மயோகிப் புகழ் வாழ்க!

ஜூலை  பதினைந்
துதித்த
கருஞ்சூரியன் காமராசர் புகழ் வாழ்க!
ஏழையர் வாழ்வுயர்த்திய
ஏழை மகன்புகழ் வாழ்க!

கொ.பெ.பி.அய்யா.






மகாத்மாக்கள் மரிப்பாறில்லை

மகாத்மாக்கள் மரிப்பதில்லை.

தந்தை இழந்தோமென
தவிக்கும் மானுடமே!
உந்தை அமைதியில்--என்றும்
உன்னிலே வாழ்கிறார்.

புனிதன் ஏசு போன் றோரும்,
புத்தன் தோன்றலின் பின்னவரும்,
மனிதம் துலங்க வந்த மகான்கள்--பிறவி 
மாறி மாறி அவதரித்து ஊறினர் .

காந்தி மார்டின் மண்டேலாவும்
ஏந்தி வந்த அவதாரங்களாவர்.
அவரவர் வேலை அவரவர் முடித்தும்--ஓய்வாய்
அமரம் ஆனோர் மீண்டும் வருவர் அவசியத்தில்.

மகாத்மாக்கள் மரிப்பாரில்லை
மனிதம் மரிக்கப் பொறுப்பார் இல்லை.
எங்கோ என்றோ தோன்றாமல் இல்லை--வரவு .
என்றோ எப்போ அறிவார் இல்லை.

அக்கிரமங் கூடி அத்து மீறுது.
உக்கிரம் ஏறி பரமனைத் தூண்டுது.
இயற்கை சீறி எச்சரிக்கை கூறுது.
எதையும் மீறினால் இறைவனே இறங்குவார்.

கொ.பெ.பி.அய்யா.