Sunday, 16 February 2014

சொல்லேர் உழவர்.

சங்கம் முழங்குவோம்

சொல்லேர் உழவர் பெருமக்களே!
வல்லார் நீவீர் வயல் இவ்வுலகில் 
நல்லார் விளைய நயம் பெற உழுது 
பொல்லார் கட்டு புரவலம் செய்து 
எல்லார் மனத்தும் இருந்து வாழ்ந்து 
தொல்லார் பெருமை துலங்கச்செய்வீர்!
பொங்கும் பொங்கலாய் பொங்கும் மங்களம்
எங்கும் தங்கிட பொங்கல் பொங்கட்டும்.    
பங்கம் மங்கவும் துங்கம் ஓங்கவும்
சங்கம் முழங்குவோம் பொங்கல் பொங்கட்டும்.
உணவு செய்பவன் கனவு கனியவும்
மனது மகிழவும் பொங்கல் பொங்கட்டும்.
மனித அணைகளும் உணர்ந்து திறந்தும்
மனிதம் வாழவும் பொங்கல் பொங்கட்டும்.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment