முயற்சிகளே பயிற்சிகள் !
இறைவனொருவன் இருக்கிறான்,
எல்லாமவனே பார்க்கிறான்,
என்றே வீணே இருந்திட்டால்;
எந்தப் பருப்பும் வேகாதே.
உணவைக்கூட ஊட்டிவிட
ஒருவரைத்தேட முயலணும்.
கனவைக்கூட காண்பதற்கும்
கண்ணுறங்க முயன்றிடணும்.
செத்துக்கிடந்த எலியையும்
சில்லறையாக்கிய கதையுண்டு=
சில்லறைக் காசுகள் கட்டாகும்
கட்டுயர்ந்தால் கனவான் நீ..!
செத்த எலியையும் விடவில்லை
விற்றா னொருவன் தெருவிலே
பூனைக்காரன் வாங்கினான்.
விற்ற காசினை லாபகமாய் வீண்செய்யாமல் பத்திரமாய்
மீண்டும் மீண்டும் வைக்கோலே
வாங்கி வாங்கி விற்று விற்று வியாபாரியே பணக்காரன்.
வளர்ந்து வளர்ந்து முதலாளி அதிபரானான் பேராளி.
முயற்சிகள்தானே பயிற்சிகளாகும்.
பயிற்சிகள்தானே திருவினையாகும்..
கொ.பெ.பி அய்யா.
No comments:
Post a Comment