எதுதான் உண்மை?
நிலவும் சூரியனும்
நிலவும் பொழுதே
நிலவும் ஒளியென்றால்
நிலவும் இருளே
நிலையாமோ!
மேகம் கூடியும்
மேலே மூடியும்
கூடும் கருப்பும்
கூறும் நிசமும்
இருளே நிரந்தரமோ!
இருளோ!ஒளியோ!
எதுதான் நிலையோ!
இருளில் ஒளிந்த
பகலோ!இல்லை
பகலுக்குள் இரவோ!
பகலவன் விழுந்திட
பகல் ஒளிகிறது.
பகலவன் எழுந்திட
இரவு விடிகிறது.
சூரியன் விளையாடுகிறது.
வெண்மை கருக்கும்
கருமை நிறைக்கும்.
வெண்மை நிலைக்காது
கருமை வெளுக்காது
உண்மையும் பொய்க்காது.
சந்தியாப் பொழுது.
சந்திக்கும் பொழுது
மாயை மயங்கி
நியாயம் விளங்க
வானம் சிவக்கிறது.
சிவந்து கருத்து
கருத்து வெளுத்து
வெளுத்துக் கருத்து
விடியல் வளர
எத்தனை எத்தனை தடுப்பு!
எதுதான் உண்மை
இரவா பகலா?
எதுதான் நிலைமை
இருளா ஒளியா?
இயற்கை சொல்லட்டும்!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment