Tuesday, 18 February 2014

பாரியகன்

பெரிய மனத்தான் பாரியகன்

பெரிய மனத்தான் பாரியகன்

தேரையே  ஈந்தவன்
பாரி வள்ளல் முல்லைக்கு!
ன்னையே ஈந்தவன்
பாரியகன் தமிழுக்கு.

சொல்லுவார் சொல்லுவார்
நல்ல தமிழ் தானென்பார்.
சொல்லுவா ரெல்லோரும்
சொல்லுவா றாவதில்லை .

உள்ளமதி லுள்ளதை
உள்ளபடி செய்வதை
கொள்ளுவது கடினமே!
கொண்டவன் வள்ளலே!

ஊர் சொல்லும் புகழ்ச்சிகள்
நேர்வதவன் பொறுப்புகள்.
யார் சொல்லும் எதிர்பார்த்தும் 
தேர்வதல்ல அவன் செயல்.

பாரியகன் என்பவன்
யாரெனக் கேட்காதீர்?
நேர்மனங் கொண்டோரெல்லாம்
பாரியகன் தானென்பேன்.
                                                            
கள்ளமில்லா உள்ளங்களை
கடவுளென வாழ்த்துவோம்!.
நல்லது செய்வாரையும்
உள்ளமதில் ஏற்றுவோம்!

பெரிய மனங்கொண்டவன்
உரியதே போற்றுவான்.
பெரியமனத்தான் பாரியகன்
அரியவன் வாழ்கவே!

கொ.பெ.பி.அய்யா.





No comments:

Post a Comment