Monday, 17 February 2014

இனிக்கும் இரவு.

இரவே இனிமை

இரவே இனிமை.
தனிமைக்கு உரிமை.
அமைதியின் சுகபோகம்
இரவில்தான் பிரவேசம்.
ஆன்மாவின் உறவு
இரவில்தான் வரவு.
உழைத்தவன் ஓய்வு
இரவில்தான் தீர்வு.
சம்சாரி இராஜ்யம்
இரவில்தான் பூஜ்யம்.
நினைவுகள் மறக்கும்
இரவுகள் இனிக்கும்.

தொலைந்த நாகரீகம்
கலைந்த பண்பாடு
சிதைந்த பழைமை
புதைந்த வழமை
மறைந்த அருமை
நிறைந்த வறுமை
இதுதான் நிலைமை
இன்றைய புதுமை.



No comments:

Post a Comment