உழுதவன் பாடு.
அந்த நாளை நினைக்
கிறேன்.
இந்த நாளை வியக்கிறேன்.
சென்ற நாளைப் படிக்
கிறேன்.
வந்த நாளைப் புரிகிறேன்
ஒருவர் ஊருக்கு முதலாளி--அந்த ஒருவர் வாழ்வே
தொழிலாளி.
உழைப்பைச் சுரண்டியப் பெரிச்சாளி,
ஒழிநததால் உயர்ந்தான் பாட்டாளி.
நாளும் உழைப்பான் உழைப்பாளி.
நாழித் தானியக் கூலிக்கு.
காரி உமிழ்வான் முதலாளி
காய்ப்பு இல்லாக் கைகளில்.
கோவணம் உழவன் சீருடை-
குடிசை அவனது மாளிகை.
வெயிலும் காற்றும் உறவாகும்
வேர்வைக் குளியல் தினமாகும்.
சோற்றுக்கு அழுவான் பிள்ளை.
மாற்றுத் துணிக்கு
மனைவி ஒளிவாள்
அழுகை அதுவே மொழியாச்சு
உழுதவன் பாடே இதுவாச்சு.
உழைப்பை உறிஞ்சி உண்டவன்,
பிழைப்பைத் தேடி ஓடுகிறான்.
காலச் சக்கரம் உருண்டு பழைமை
காடசியும் மாறிப் புரண்டது.
கொ,பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment