பொய்யான உலகம்
உணர்வுகளை உசுப்பிவிட
கனவினை அழைக்கிறேன்.
கனவுகளை எழுப்பிவிட
நினைவினை வேண்டுகிறேன்.
நினைவுகளை மலரவிட
மனதினைக் கேட்கிறேன்.
மனதினைத் தூங்கவிட
மனிதனைக் கெஞ்சிறேன்.
பொய்யான உலகமிதில்
புகழுக்கு ஏங்குகிறார்.
மெய்யென்றால் என்னவென
பொய்யாரைக் கேட்கிறார்.
வைத்திருந்தால் சொத்துபத்து
வரலாறும் படைக்கலாம்.
கையாளன் கிறுக்கினாலும்
காவியங்கள் ஆகலாம்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment